புதிய கல்விக் கொள்கை
மீதான விமர்சனம் அரசியல் ரீதியாக உள்ளது.. கல்வி சார்ந்து வரவில்லை எனச் சிலர்
பேசுவதும், அப்படிப்
பேசுவோர் நடுநிலையாளர் போல தங்கள் முகத்தை வைத்துக்கொள்வதும் ஒரு வேடிக்கை..!
கல்விக் கொள்கையில்
இல்லாத அரசியலா..?
ஒருபுறம், வர்ணாசிரம நஞ்சு கலந்த பழமையைக்
கொண்டாடியும் மறுபுறம் சர்வதேச நவீன
வர்த்தகத்துக்குக் கடை விரித்தும் கல்விக் கொள்கையில் ஒரு நாடகம் நடக்கிறதே! அந்த
நாடகத்தின் கரு என்ன?
அது கல்வியா? அரசியலா?
ஆண்டுதோறும்
லட்சக்கணக்கில் குழந்தைகள் தொழிலாளிகள் ஆவதும், கடத்தப்படுவதுமான அவமானம் தொடரும் நாட்டில், 5ஆம் வகுப்பிலேயே தேர்வு வைத்து
வடிகட்டிப் பிள்ளைகளைப் பள்ளியை விட்டுத் துரத்த நினைப்பது... கல்வியா?அரசியலா?
பல்வேறு
சூழலில்-பல்வேறு ஏற்றத்தாழ்வுகளுடன் பிள்ளைகள் இங்கு வளர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவர்க்கும் தேசிய அளவில் ஒரே விதமான பாடத்திட்டமாம்! இந்த மூர்க்கத்தனமான
யோசனையின் பின்னணி என்ன? அது கல்வியா? அரசியலா?
கல்வி குறித்த புதிய
புரிதல்களால் உலகம் முழுக்க வெளிச்சம் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கல்விக்
கொள்கை மட்டும் வேலைவாய்ப்புக்கான திறன்கள் குறித்து வறட்டுத்தனமாய்க் கூப்பாடு
போட்டு, மொழி, வரலாறு போன்ற கலைப் பாடங்களுக்கு
எதிராகக் கத்தியைத் தீட்டுகிறதே! இது கல்வியா?
அரசியலா?
கல்வி வேறு அரசியல்
வேறா?....
கல்வியில் இல்லாத
அரசியல் வேறு எங்கிருக்கிறது?
பேரா.
ச.மாடசாமி
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.